கொல்கத்தா கொல்கத்தா ஆர் ஜி கர் மருத்துவ மனையில் பயிற்சி மருத்து வர் பாலியல் வன்கொடுமை க்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப் பட்டதற்கு நீதி கேட்டு போராடி வரும் இளநிலை மருத்துவர்கள், மற்ற கோரிக்கைகள் நிறை வேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் போராட்டத்தின் அழுத்தத்தின் காரணமாக, காவல்துறை ஆணையர், இணை ஆணையர் வடக்கு, சுகாதாரச் சேவைகள் இயக்குநர் மற்றும் மருத்துவக்கல்வி இயக்குநர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும் கட்டாயத்துக்கு அரசு தள்ளப்பட்டது. இது எங்களின் தீவிரமான போராட்டத்துக்கு கிடைத்த ஒரு சிறிய வெற்றி. ஆயினும் எங்களின் மற்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை நாங்கள் போராட்டத் தை தொடர்வோம் என குறிப்பிட்டுள்ளனர்.
இன்னும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள்
சுகாதார சேவைகளை மேம்படுத்தாமல், மருத்துவமனைகளில் மட்டும் பாதுகாப்பை அதிகரிப்பது மருத்துவர்களின் பாதுகாப்பு என்பதை சாத்தியமாக்காது. மருத்துவமனை களில் சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட பிரிவுகளை போதுமான அளவு பணி இடங்க ளை நிரப்ப வேண்டும். மருத்துவமனைகளில் படுக்கைகள் ஒதுக்கீட்டில் ஊழல், உயிர் காக்கும் மருந்துகளின் தட்டுப்பாடு போன்ற வைகளால் சாதாரண மக்கள் அதிக அளவில் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இது போன்ற பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட் டுள்ளனர்.
எங்கள் போராட்டத்தால் உருவான அழுத்தத்தின் காரணமாக முதல்வர் மம்தா நோயாளிகள் நலக்குழுக்கள் கலைக்கப் படும் என்று அறிவித்தார். ஆனால் எழுத்துப் பூர்வமாக எந்த உத்தரவாதமும் வழங்கப்பட வில்லை. மீண்டும் இந்தக் குழுக்கள் எவ் வாறு அமைக்கப்படும் என்பது பற்றிய தெளிவும் இல்லை. இவை அனைத்துக்கும் அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் இளநிலை மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.